இருதயராஜ் சார்
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ல் பதிவேற்றணும்ன்னு நெனச்சது, கொஞ்சம் தாமதமான பதிவுதான் But its better late than never அப்படிங்குறதால இன்னைக்கு பதிவேற்றம். இன்னும் ஞாபகம் இருக்கு , மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தப்போ டிவி பக்கத்துல இருக்குற ஜன்னலின் கம்பியை கையால் பிடிச்சிக்கிட்டு கண்ணில் வழிய காத்துக்கிட்டு இருந்த கண்ணீரை அடக்கி வச்சிட்டு உறுதியான குரல்ல "இல்லப்பா நான் வேற ஸ்கூல் மாறிக்கிறேன்" ன்னு அண்ணன் சொன்னது. சிலநாட்களாகவே பிரச்சனைன்னு தெரியும் அவன் ரொம்ப மன உளைச்சல்ல இருக்கிறதும் தெரிஞ்சது. நமக்குத்தான் படிக்கிறது கஷ்டம். பள்ளிக்கூடம் போனாலே dictation, ரேங்க் கார்டு முட்டி போடுறது இம்போசிஷன் ன்னு ஆயிரத்தெட்டு பிரச்சனை. நாமளே கம்முன்னு பள்ளிக்கூடம் போயிட்டு வரோம். நல்லா படிச்சி நமக்கு கெட்ட பேர் வாங்கிக்கொடுக்குற இவனுக்கு ஸ்கூலுக்கு போக என்ன பிரச்சனை? ஒருவேளை பதினொன்னாவது வகுப்புக்கு இங்கிலீஷ் மீடியம் மாறினதால படிக்க கஷ்டமா இருக்கோ? ன்னு நானே மனசுகுள்ள கேள்வி கேட்டுகிட்டே சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். மதியம் அப்பா லீவு போட்டுட்டு அண்ணனின் பள்ளிக்கு கூட போனாங்க. சாயந்திரம