கயல் 2.0
நீதான் அவனை திருத்தணும். கல்யாணம் ஆனா மாறிடுவான். அதுக்காகவா அவனை வேணாம்ன்னு சொல்லுற என்று அடுக்கிக்கொண்டே போன செண்பகம் அத்தையை கயலின் அந்த ஒற்றை வரி ஒரு நிமிடம் திகைப்படைய வைத்தது. "நான் என்ன சோசியல் சர்விஸ்ஸா செய்யிறேன்" ன்னு கயல் அவளோட தொனியில சொன்னதும் அவ்வளவு நேரம் ரொம்ப சீரியஸ்ஸா இருந்த எல்லாருக்குமே கொஞ்சம் சிரிப்பு எட்டிப் பார்த்தது. செண்பகம் அத்தைக்கு பயந்து கொஞ்சம் எல்லாருமே அதை கட்டுப்படுத்திக்கிட்டு இருக்க வேண்டி இருந்தது. (எதாவது சொல்லி நம்மள சிரிக்க வச்சி யார்கிட்டயாவது மாட்டிவிட்டுட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி பாவமா மூஞ்சிய வச்சிக்கிறதுல கயலை அடிச்சிக்கவே முடியாது.) அத்தைக்கு ஏற்கனவே என் மேல ஒரு டவுட். நான்தான் இவளை உசுப்பேத்தி இருப்பனோனு, கயலின் அம்மா கிட்ட கூட சொல்லி இருந்தாங்க "நான் வளர்த்த பிள்ளை என் பேச்சை தட்டவே தட்டாது, அவ சேர்க்கை(நான் தான் அந்த சேர்க்கை) சரியில்லை"ன்னு. இப்போ confirm செஞ்சிருப்பாங்க . "ஒரு சாத்துக்குடி ஜூஸ்க்கும் சமோசாவுக்கும் ஆசைப்பட்டு இங்க வந்து மாட்டிகிட்டயே டான்யா"ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு "ஹாஸ்டல்ல ...